டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ஜார்க்கண்ட்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு - முன்னாள் முதல்வர் பாஜகவில் ஐக்கியம்?

இடைக்கால முதல்வராக பொறுப்பு வகித்த சம்பயி சோரன், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மன வருத்தம்..

News image

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன்

Updated On :17 ஆகஸ்ட் 2024, 5:49 pm IST

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறையல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக சம்பயி சோரன் சில மாதங்கள் பதவி வகித்தார். அதன் பின், கடந்த ஜூன் மாதம், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இடைக்கால முதல்வராக பொறுப்பு வகித்த சம்பயி சோரன், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பாஜகவில் சேரப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பயி சோரனுக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது. சம்பயி சோரன் முதல்வராக சிறப்பாக செயல்பட்டதாகவும், அவரது செயல்பாட்டால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த நிலையில், அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய சம்பயி சோரன், இது போன்ற வதந்திகள் வெளியாகியிருப்பது குறித்து தனக்கு தகவல் ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.