முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பட்டமளிப்பு விழாவில் ‘இந்திய’ பாரம்பரிய உடை: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அறிவுறுத்தல்

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :24 ஆகஸ்ட் 2024, 2:15 am IST

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தந்த மாநிலங்களின் கலாசாரத்துக்கு ஏற்ப இந்த உடைகளை வடிவமைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கி மற்றும் தொப்பிகளே பட்டமளிப்பு விழாவின்போது உடுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் வடிவமைக்கப்பட்டது. இதை தாங்கள் ஆட்சி செய்த காலனிய பகுதிகளில் பிரிட்டிஷ் அறிமுகப்படுத்தியது.

எனவே, இந்த நடைமுறையை மாற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எய்ம்ஸ் உள்பட சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பட்டமளிப்பு விழாவுக்கென பிரத்யேக இந்திய உடையை வடிவமைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த உடைகளை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் கலாசாரத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். இதுதொடா்பான அறிக்கைகளை அமைச்சகத்துக்கு சமா்ப்பித்து மத்திய சுகாதாரச் செயலரின் ஒப்புதலை பெற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.