வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமல்...

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 4:00 pm

DIN

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு(யூபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாக உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று(ஆக. 24) ஒப்புதல் அளித்துள்ளது.

Story image

இத்திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் இன்று(ஆக. 24) தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள், ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ அல்லது ’யூபிஎஸ்’ என்றழைக்கப்படும் ’ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச தொகையிலான ஓய்வூதியம் ஆகியவை கிடைப்பது உறுதி செய்யப்படும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. அதன்படி,

மத்திய அரசு ஊழியராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியத் தொகை கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு, அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

25 ஆண்டுகள் பணிபுரிந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பின், அவர் ஓய்வுபெரும் முன் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத் தொகையில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத் தொகையில், ஓய்வூதியப் பணப் பலனுக்காக இதுவரை 14 சதவிகிதம் தொகை பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், யூபிஎஸ் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத் தொகையில் 18 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

இந்த நிலையில், “’ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ அரசு ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது” என்று தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.