கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஜம்மு-காஷ்மீர்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வாபஸ்! ஏன்?

ஜம்மு -காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு சில நிமிடங்களில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

News image

கோப்புப்படம் - dotcom

Updated On :26 ஆகஸ்ட் 2024, 12:31 pm IST

ஜம்மு -காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு சில நிமிடங்களில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

தேர்தலையொட்டி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் பாஜக இன்று(திங்கள்கிழமை) காலை 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மூன்று கட்டங்களிலும் முறையே 15, 10, 19 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இந்த பட்டியல் வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

தற்போதைய பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதால் பட்டியல் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் மாற்றம் செய்யப்பட்ட புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாஜக கூறியது.

இதன் பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.