ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பாட்டில், கேன் குடிநீருக்கு கடுமையான தரச் சோதனை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு

குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும்

News image
Updated On :6 டிசம்பர் 2024, 4:01 am IST

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் நிறைந்த பொருள்களில் ஒன்றாக மீண்டும் வகைப்படுத்தப்படுகின்றன.

எனவே, அத்தகைய தயாரிப்புகள் மிகவும் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும். அந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய அங்கு ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.