இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை செல்கிறாா்.
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமாவைத் தொடா்ந்து, புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் உயா்நிலை பிரதிநிதி ஒருவா் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
மேலும், வங்கதேசத்தில் ‘இஸ்கான்’ துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவு பாதித்துள்ளது. இதற்கு மத்தியில் வெளியுறவுச் செயலரின் வங்கதேச பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இப்பயணத்தில் வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தின் மற்றும் வெளியுறவு அமைச்சா் தௌஹித் ஹூசைன் ஆகியோருடன் மிஸ்ரி சந்தித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட இருக்கிறாா். மேலும், இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸையும் அவா் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு

ஹசீனாவின் செய்தியாளா் சந்திப்பு திட்டமிடலில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை: வெளியுறவு அமைச்சகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



