சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

News image

PTI

Updated On :10 டிசம்பர் 2024, 8:53 pm IST

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த வங்கதேசத்தை சேர்ந்த மீனவர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன் பிடிக்க அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். கைதான மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்கள் அனைவரும் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்திய கடல் பகுடியில் அத்துமீறி மீன் பிடித்ததால் இந்திய கடலோரக் காவல்படை அவர்களை படகுகளுடன் சிறை பிடித்துள்ளது. அவர்களிடமிருந்த மீன் உள்பட சுமார் 160 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைபிடிக்கப்பட்ட படகுகள் இரண்டும் விசாரணைக்காக பாரதீப் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அண்டை நாட்டு மீனவர்கள் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை தடுக்க ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் சுமார் 484 கி.மீ. தொலைவுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளடு குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.