

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (டிச. 11) கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா(வயது 92) வயது மூப்பால் உடல்நிலை மோசமாகிய நிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (டிச. 11) அதிகாலை அவர் காலமானார். எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மாண்டியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கர்நாடகத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.