பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!
PTI
Published on
Updated on
2 min read

தில்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, 17 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.

PTI

பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவிலிருந்து இன்று(டிச. 14) சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி நோக்கி நடைபயணத்தை மீண்டும் தொடங்கினர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை தொடர்ந்து முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறை விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அதில் காயமடைந்த விவசாயிகள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் தில்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட தில்லி நிர்வாகம் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

PTI

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் பிரிவின் செயல் தலைவர் பஜ்ரங் புனியா ஷம்பு எல்லையில் விவசாயிகளுடன் அமர்ந்து இன்று போராட்டம் நடத்தினார்.

PTI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com