எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தென்னிந்திய மாநிலங்களில் அதிகரித்த சிசேரியன் அறுவைசிகிச்சை! முதலிடத்தில்..

தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் அறுவைசிகிச்சைகள் அதிகரிப்பு.. முதலிடத்தில்..

News image
சிசேரியன் அறுவைசிகிச்சைகள்
Updated On :19 டிசம்பர் 2024, 6:29 am

DIN

நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகமாக நடப்பதாகவும் முதலிடத்தில் தெலங்கானா இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த நாட்டில் நடக்கும் குழந்தைப் பேறுகளில் சராசரியாக 21.5 சதவீதம் சிசேரியன் மூலம் நடக்கிறதாம். ஆனால் இதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக தெலங்கானாவில் சிசேரியன் நடக்கிறது.

இது மட்டுமா, 2030ஆம் ஆண்டில், உலகிலேயே, அதிக சிசேரியன் அறுவைசிகிச்சை நடக்கும் நாடாகவும் இந்தியா மாறிவிடும் என்றும் இந்த தரவுகள் எச்சரிக்கின்றன.

இயற்கை முறையில் குழந்தைப் பேறுக்கு பெண்கள் பயப்படுவதும், சில குறிப்பிட்ட நாள், நேரம், ராசியில் குழந்தையைப் பெற்றெடுக்க குடும்பத்தினர் விரும்புவது உள்ளிட்ட சில பல காரணங்கள் சிசேரியன் மூலம் குழந்தைப் பேறு அதிகரிப்பதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏழைகளை விடவும், பணக்காரர்களே அதிகம் சிசேரியன் செய்துகொள்வதாகவும் தெலங்கானா 60.7 சதவீதம் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு நடப்பதாகவும் அதுதான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் 44.9 சதவீதத்துடன் 2ஆம் இடத்திலும், ஆந்திரம் 42.4 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், கேரளம் 38.9 சதவீதத்துடன் 4வது இடத்திலும் கர்நாடகத்தில் 31.5 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

கிழக்கு மாநிலங்கள் சிசேரியன் அறுவைசிகிச்சையில் மிகவும் பின்னால் உள்ளது. கடைசி இடத்தில் நாகாலாந்து உள்ளது. இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த குழந்தைப்பேறில், 5.2 சதவீதம்தான் சிசேரியன் நடக்கிறதாம். மேகாலயத்தில் 8.2 சதவீதமும், பிகாரில் 9.7 சதவீதமும் சிசேரியன் அறுவைசிகிச்சைகள் நடக்கிறதாம்.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இன்னமும் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி மக்களிடையே அதிகம் பிரபலமடையவே இல்லையாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.