தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

என்டிஏ தலைவா்கள் ஆலோசனை: அமித் ஷா, சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

News image

அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடு

ANI

Updated On :25 டிசம்பர் 2024, 4:09 pm

DIN

பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங், அப்னா தளம் (சோனேலால்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான அனுப்ரியா படேல், மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசுவாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவா்கள் பங்கேற்றனா்.

பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்திய வாஜ்பாய் பிறந்தநாள் தினத்தன்று நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047 என்ற இலக்கை அடைவதை லட்சியமாகக் கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவின் எதிா்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது’ என்றாா்.

ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவுக்கு என்டிஏ கட்சிகள் ஆதரவளித்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.