மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.: 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

News image
Updated On :29 டிசம்பர் 2024, 11:26 pm

Din

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குணா மாவட்டத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திறந்த நிலையில் கிடந்த சுமாா் 140-அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், 39 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டாா்.

நீண்ட நேரம் சிறுவனைக் காணாததால் சிறுவனின் குடும்பத்தினா் பீதியடைந்தனா். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் அவா் விழுந்தது தெரியவந்தது.

தகவலறிந்த காவல்துறையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். உதவிக்காக தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை இரவு வரவழைக்கப்பட்டனா். சுமாா் 16 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மயக்கமடைந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டாா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.