மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்களில் மக்களவை இடைக்கால பட்ஜெட் உரையை முடித்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் 57 நிமிடங்கள் பட்ஜெட் உரையை முடித்தார்.