புதுதில்லி: காரீஃப் கோடை-பருவத்தில் விதைக்கப்பட்ட 600 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு மேல் ஆதரவு விலையாக பெற்ற 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
2023-24 கோடை பருவத்தில் இது வரை 600 லட்சம் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ரூ.1,30,000 கோடிக்கும் அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கும் 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கொள்முதல் ஆனது 2023 அக்டோபரில் தொடங்கியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுச் சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க ஆண்டுக்கு சுமார் 400 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், மத்திய தொகுப்பில் 525 லட்சம் டன் அரிசி உள்ளது.
2024 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ரபி பருவத்தில் கோதுமை கொள்முதலை அதிகரிக்க அரசு தயாராகி வருகிறது. இதற்காக முக்கிய கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


