புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

600 லட்சம் டன் நெல் அரசு கொள்முதல்!

காரீஃப் கோடை-பருவத்தில் விதைக்கப்பட்ட 600 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு மேல் ஆதரவு விலையாக பெற்ற 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 2:27 pm

DIN

புதுதில்லி: காரீஃப் கோடை-பருவத்தில் விதைக்கப்பட்ட 600 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு மேல் ஆதரவு விலையாக பெற்ற 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

2023-24 கோடை பருவத்தில் இது வரை 600 லட்சம் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ரூ.1,30,000 கோடிக்கும் அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கும் 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கொள்முதல் ஆனது 2023 அக்டோபரில் தொடங்கியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுச் சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க ஆண்டுக்கு சுமார் 400 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், மத்திய தொகுப்பில் 525 லட்சம் டன் அரிசி உள்ளது.

2024 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ரபி பருவத்தில் கோதுமை கொள்முதலை அதிகரிக்க அரசு தயாராகி வருகிறது. இதற்காக முக்கிய கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.