வங்கிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணப்பரிமாற்றத்தை உறுதி செய்ய கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று வெளியிட்ட அறிவிப்பில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கான கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பிற்கான வழிகாட்டுதல்களை மத்திய வங்கி வெளியிடும் என்று வியாழக்கிழமை அறிவித்தார்.