மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது!

பிரபல இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

News image
Updated On :8 பிப்ரவரி 2024, 3:50 pm

புதுதில்லி: பிரபல இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

83 வயதான பியாரிலால் சர்மாவுக்கு குடியரசு நாளன்று இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

33 ஆண்டுகளாக நடைபெற்றும் வரும் லட்சுமிநாராயணா குளோபல் இசை விழாவின் ஒரு பகுதியாக லட்சுமிநாராயணா சர்வதேச விருதை இசைக்கலைஞர்கள் எல்.சுப்ரமணியம் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோர் தொழில்துறையின் மூத்த தலைவருக்கு வழங்கி கெளரவித்தனர். சிறந்த இசையமைப்பாளர், இசை ஏற்பாட்டாளர் மற்றும் வயலின் கலைஞருக்கு இந்த விருதை வழங்கியதில் மிகப்பெரிய கெளரவம் அடைகிறேன் என்றனர்.

எல்.பி. என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் பியாரிலால் சர்மா மற்றும் அவரது இசை ஒத்துழைப்பாளர் லட்சுமி காந்த் குடல்கர் ஆகியோர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வாழ்க்கையில் தோ ராஸ்தே, தாக், பாபி, அமர் அக்பர் அந்தோணி மற்றும் கர்ஸ் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார்.

லட்சுமி காந்த் மறைவு பிறகு, 2007ல் ஓம் சாந்தி ஓம்,  தூம் தானா ஆகிய பாடல்களுக்கு பியாரிலால் இசை அமைப்பாளராக பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.