ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை வரவேற்ற முன்னாள் பிரதமர் மகள்!

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தனது தந்தைக்கு பெயர் சூட்டப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகளும், பிஆர்எஸ் எம்.எல்.சி.யான வாணி தேவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 5:57 pm IST


ஹைதராபாத்: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தனது தந்தைக்கு பெயர் சூட்டப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகளும், பிஆர்எஸ் எம்.எல்.சி.யான வாணி தேவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடு கடினமான காலங்களை எதிர்கொண்டபோது பிரதமரான நரசிம்ம ராவ், சீர்திருத்தங்களை செயல்படுத்தினார் என்றார்.

கட்சிகளைத் தாண்டி, நரசிம்ம ராவவை அங்கீகரிப்பதும், பாரத ரத்னா விருது வழங்குவதும் நமது பிரதமர் மோடியின் நல்ல மதிப்புகளையும், நடத்தைகளையும் எடுத்து காட்டுகிறது. எனது தந்தை  சீர்திருத்தங்களைத் தொடங்கினார். அதே வேளையில் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்தார். பொதுமக்களின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்க சிறிது தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றார்.

என தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்படுவதால் தெலுங்கானா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நாங்களும்  உற்சாகமாக உள்ளோம்.

முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய அரசு தனது தந்தையின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடியதற்கும் அவர் மனதார பாராட்டு தெரிவித்தார்.

தென் மாநிலங்களிலிருந்து பிரதமரான முதல் தலைவர் நரசிம்மராவ் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.