ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விவசாயிகளுடன் 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தை!

விவசாயிகள் அமைப்பு தலைவா்களுடன் இன்று(பிப்.18) மத்திய அமைச்சா்கள் 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனர்.

News image

விவசாயிகள் போராட்டம் - பிடிஐ

Updated On :18 பிப்ரவரி 2024, 6:33 am

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாய அமைப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனா்.

இதனிடையே, முன்னெச்சரிக்கையாக தில்லியின் எல்லைகளில் பல்வேறு வகையான தடுப்புகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் உள்ளே நுழையாதவாறு ‘கோட்டை’ போல் மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியாணா எல்லையான அம்பாலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

முற்றுகைப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பாரதிய விவசாயிகள் யூனியன் பொதுச் செயலாளா் சுக்தேவ் சிங் கூறினாா்.

இந்நிலையில், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்களுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறவுள்ளது. முன்னதாக, விவசாயிகள் அமைப்பு தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோா் சண்டீகரில் வியாழக்கிழமை மேற்கொண்ட மூன்றாவது சுற்று பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இன்று(பிப்.18) நடைபெறுகிறது. போராடும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பஞ்சாப், ஹரியாணா தலைநகர் சண்டிகரில் இன்று(பிப்.18) மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.