2,000 நபர்களை பணியமர்த்த உள்ள டெஸ்லா பவர் இந்தியா

டெஸ்லா பவர் இந்தியா நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிரிவுகளில் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2,000 நபர்களை பணியமர்த்த உள்ள டெஸ்லா பவர் இந்தியா
Published on
Updated on
1 min read

மும்பை: டெஸ்லா பவர் இந்தியா நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிரிவுகளில் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி ஆட்சேர்ப்பு, பொறியியல், செயல்பாடுகள், விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஆதரவு செயல்பாடுகள் ஆகிய பதவிகளை இதில் உள்ளடக்கியது.

ஆற்றல் சேமிப்பு தீர்வுகள் வழங்குநர் சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட பேட்டரி பிராண்டான ரீஸ்டோர்-ஐ அறிமுகப்படுத்தியது. அதே வேளையில் 2026ல் நாடு முழுவதும் 5,000 ரீஸ்டோர் யூனிட்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டால் இந்த பணியமர்த்தல் துவங்கியுள்ளது. பணியாளர்களை அதிகரிப்பதன் மூலம், எங்கள் திறன்களை மேம்படுத்தவும், புதுமைகளை இயக்கவும், ஆற்றல் சேமிப்புத் துறையில் முன்னோடி நிலையை உறுதிப்படுத்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்த பணியமர்த்தல்கள் எங்கள் வளர்ச்சியை இயக்குவதிலும், நிலையான எரிசக்தி எதிர்காலத்திற்கான இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிப்பதிலும் முக்கிய பங்கு டெஸ்லா பவர் இந்தியாவின் வகிக்கும் என்று நிர்வாக இயக்குநர் கவிந்தர் குரானா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com