தெலங்கானா எம்எல்ஏ பலி: 10 நாள்களுக்கு முன் நூலிழையில் உயிர் தப்பியவர்

விபத்தில் பலியான தெலங்கானா எம்எல்ஏ கடந்த 10 நாள்களுக்கு முன்பு நூலிழையில் உயிர் தப்பியவர் என்று தெரியவந்துள்ளது.
தெலங்கானா எம்எல்ஏ பலி: 10 நாள்களுக்கு முன் நூலிழையில் உயிர் தப்பியவர்

ஹைதராபாத்: தெலங்கானா எம்எல்ஏ லஸ்யா நந்திதா, ஹைதராபாத்தில் நேரிட்ட சாலை விபத்தில் இன்று பலியானார். இவர் பத்து நாள்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா எம்எல்ஏ பலி: 10 நாள்களுக்கு முன் நூலிழையில் உயிர் தப்பியவர்
புடின் எதிர்ப்பு அடையாளமாகிறார் நவால்னியின் மனைவி! ரஷிய அதிபர் தேர்தல் நேரத் திருப்பங்கள்

கடந்த 10 நாள்களுக்கு முன்பு, லாஸ்யா நந்திதா (37) சென்ற கார் நார்காட்டுப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானதில், அவர் நுலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நந்திதா சென்று கொண்டிருந்த கார் மீது, மற்றொரு காரை குடிபோதையில் ஓட்டிவந்த நபர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில், நந்திதாவின் பாதுகாவலர் பலியானார். லேசான காயங்கனுடன் நந்திதா உயிர் தப்பினார்.

இந்த நிலையில்தான், இன்று காலை 5.30 மணிக்கு ஹைதராபாத்தில், மாருதி எக்ஸ்எல்6 ரக வாகனத்தில் நந்திதா வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நந்திதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு விபத்துகள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com