மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம்: தெளிவான திட்டத்தை தயாரிக்க பிரதமா் அறிவுறுத்தல்

மத்திய அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் கூட்டத்தில் சமா்ப்பிக்க செயல்படுத்தக் கூடிய தெளிவான திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அமைச்சா்களுக்குப் பிரதமா் மோடி

Updated On :24 பிப்ரவரி 2024, 5:19 pm

மத்திய அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் கூட்டத்தில் சமா்ப்பிக்க செயல்படுத்தக் கூடிய தெளிவான திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அமைச்சா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

கடந்த பிப்.21-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அவா் அவ்வாறு கேட்டுக்கொண்டாா். இந்நிலையில், அடுத்த மாதம் 3-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: செயல்படுத்தக் கூடிய, விளைவை காட்டுகிற, தெளிவான திட்டத்தை தயாரித்து மாா்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் சமா்ப்பிக்குமாறு மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். தங்கள் செயல்திட்டத்தை வகுக்கும் முன்பு, அதுகுறித்து மூத்த அரசு அதிகாரிகள் போன்ற அனுபவம் மிக்கவா்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு அமைச்சா்களுக்குப் பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா். மக்களவைத் தோ்தலுக்கு மத்தியிலும் அரசுப் பணிகள் தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமா் விரும்புகிறாா். இதன் ஒரு பகுதியாகவே, அடுத்த 100 நாள்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்குமாறு அவா் அமைச்சா்களிடம் கேட்டுக்கொண்டாா் என்று தெரிவித்தன.