அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர்கள்! முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம்!

சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் சூட்டப்பட்ட விவகாரத்தில் முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்பிலிருந்து

Updated On :26 பிப்ரவரி 2024, 9:03 am IST

அகர்தலா: வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில், முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்று பெயர் சூட்டியிருப்பது, மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விஎச்பி அமைப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, முதன்மை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையின்படி, திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி ஆண், பெண் என இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கங்களில் ஒரு சிங்கத்துக்கு அக்பர் என்றும், மற்றொரு சிங்கத்துக்கு சீதா என்றும் திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பெயர் சூட்டியிருந்தார். இவர் 1994ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியாவார். இவர்தான், சிங்கங்களை சிலிகுரிக்கு அனுப்பும் போது அதற்கான ஆவணங்களில் அக்பர், சீதா என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்விரு சிங்கங்களும் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.

அதில், சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என சூட்டப்பட்டிருக்கும் பெயர்களை மாற்ற வேண்டும். இந்து மத வழக்கப்படி, சீதை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் சிங்கத்துடன் சீதா சிங்கத்தை ஒன்றாக பராமரிப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்று கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி , சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றும், சிங்கங்களுக்கு இந்தப் பெயரை வைத்தது யார்? என்றும் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒரு மதத்தைச் சேர்ந்த, மரியாதைக்குரிய, போராளிகள் போன்றவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்குச் சூட்ட வேண்டாம் என்றும், இரண்டு சிங்கங்களின் பெயர்களையும் மாற்றுங்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பிரபின் லால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அக்பர், சீதா என பெயர் சூட்டியதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.