தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர்கள்! முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம்!

சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் சூட்டப்பட்ட விவகாரத்தில் முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்பிலிருந்து

Updated On :26 பிப்ரவரி 2024, 9:03 am IST

அகர்தலா: வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில், முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்று பெயர் சூட்டியிருப்பது, மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விஎச்பி அமைப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, முதன்மை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையின்படி, திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி ஆண், பெண் என இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கங்களில் ஒரு சிங்கத்துக்கு அக்பர் என்றும், மற்றொரு சிங்கத்துக்கு சீதா என்றும் திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பெயர் சூட்டியிருந்தார். இவர் 1994ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியாவார். இவர்தான், சிங்கங்களை சிலிகுரிக்கு அனுப்பும் போது அதற்கான ஆவணங்களில் அக்பர், சீதா என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்விரு சிங்கங்களும் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.

அதில், சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என சூட்டப்பட்டிருக்கும் பெயர்களை மாற்ற வேண்டும். இந்து மத வழக்கப்படி, சீதை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் சிங்கத்துடன் சீதா சிங்கத்தை ஒன்றாக பராமரிப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்று கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி , சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றும், சிங்கங்களுக்கு இந்தப் பெயரை வைத்தது யார்? என்றும் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒரு மதத்தைச் சேர்ந்த, மரியாதைக்குரிய, போராளிகள் போன்றவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்குச் சூட்ட வேண்டாம் என்றும், இரண்டு சிங்கங்களின் பெயர்களையும் மாற்றுங்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பிரபின் லால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அக்பர், சீதா என பெயர் சூட்டியதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.