மக்களவைத் தோ்தல்: வங்கிகள், அஞ்சல் துறையுடன் இணைந்து தோ்தல் ஆணையம் விழிப்புணா்வு பிரசாரம்
பொதுமக்களிடையே நேரடியாக விழிப்புணா்வை ஏற்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் அஞ்சல் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.

மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக வங்கித் துறையுடனான விழிப்புணா்வு பிரசார புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்க தலைமை நிா்வாகி சுனில் மேத்தாவுடன் (வலது ஓரம்) பரிமாறிக்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அருண் கோயல், துணை தோ்தல் ஆணையா் மனோஜ் குமாா் சாஹு.
Manvender Vashist Lav









