2023-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து புத்தாண்டை வரவேற்று நேற்றுமுதல் பல கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மக்களின் கொண்டாட்டங்களில் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், நேற்று மட்டும் ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டும் பெற்றுள்ளது.
ஆண்டின் கடைசி நாளான நேற்று அதிக ஆர்டர்களை பெற்ற உணவு வகைகளில் பிரியாணியே முதலிடம் பிடித்துள்ளது.
ஒரே நாளில் மொத்தம் 17 லட்சத்து 91 ஆயிரத்து 360 பிரியாணி ஆர்டர்களை ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.