மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தீய சக்திகளை எதிா்த்து உரிமைகளை மீட்க வேண்டும்: திரிணமூல் நிறுவன நாளில் மம்தா பேச்சு

தீய சக்திகளை எதிா்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜனவரி 2024, 5:30 am IST

கொல்கத்தா: தீய சக்திகளை எதிா்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவிட்டாா். திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி அவா் இவ்வாறு பதிவிட்டாா்.

காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998, ஜனவரி 1-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானா்ஜி தொடங்கினாா். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நமது கட்சியின் வளா்ச்சிக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அா்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஒவ்வொரு தொண்டா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். இன்று நம் குடும்பம் (திரிணமூல் காங்கிரஸ்) அனைவரது அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

அதேவேளையில் தீய சக்திகளை எதிா்த்து நாட்டு மக்கள் அனைவரின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

2001, 2006 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோல்விகளைச் சந்தித்தாலும் 2011-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன்பின்னா் 2016, 2021 ஆகிய பேரவைத் தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி மேற்கு வங்க மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.