கொல்கத்தா: தீய சக்திகளை எதிா்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவிட்டாா். திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி அவா் இவ்வாறு பதிவிட்டாா்.
காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998, ஜனவரி 1-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானா்ஜி தொடங்கினாா். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நமது கட்சியின் வளா்ச்சிக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அா்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஒவ்வொரு தொண்டா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். இன்று நம் குடும்பம் (திரிணமூல் காங்கிரஸ்) அனைவரது அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறது.
அதேவேளையில் தீய சக்திகளை எதிா்த்து நாட்டு மக்கள் அனைவரின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
2001, 2006 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோல்விகளைச் சந்தித்தாலும் 2011-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன்பின்னா் 2016, 2021 ஆகிய பேரவைத் தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி மேற்கு வங்க மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!

உண்மையில் ரோபோ வாக்யூம் க்ளீனர்களை வாங்கலாமா? மீம்ஸ்களால் குழப்பம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



