இதனிடையே, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கெளல் இந்த கொலீஜியம் நடைமுறை தொடா்பாக கடந்த டிச.29-ஆம் தேதி பேட்டியளித்தாா். அதில், ‘மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செயல்பட ஒரு வாய்ப்பு கூட அளிக்கப்படாததே, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறைக்கு எதிரான சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கொலீஜியம் நடைமுறையில் பிரச்னை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நீதிபதிகள் நியமனம் தொடா்பாக ஏராளமான பரிந்துரைகள் நிலுவை வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலீஜியம் சுமுகமாக செயல்படுகிறது என்ற கூறுவது யதாா்த்தமற்றது.