நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

4 வயது மகனைக் கொன்று உடலை பையில் அடைத்த தலைமை நிர்வாகி!

கடலோர மாநிலத்தில்  4 வயது மகனைக் கொன்று பையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2024, 1:28 pm IST

கடலோர மாநிலத்தில்  4 வயது மகனைக் கொன்று பையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனரும், ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருப்பவர் சுசனா சேத்(39).

இவர் கடந்த ஞாயிறன்று வடக்கு கோவாவில் உள்ள பிரபல அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார். திங்களன்று காலை அறையை காலி செய்துவிட்டு பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இந்த நிலையில், அறையைச் சுத்தம் செய்ய சென்ற பராமரிப்பு ஊழியர் அறையில் அங்கங்கு ரத்தக்கறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உணவக நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். 

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுசனா தனது மகனுடன் அறைக்கு வந்துள்ளார். திரும்பிச்செல்லும் போது தனியாகச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் சுசனாவை தொடர்புகொண்டு தொலைபேசியில் விசாரித்தனர். கர்நாடகத்தில் சுசனாவை போலீஸார் கைது செய்தனர். 

கணவருடன் பிரிந்ததன் காரணத்தால் மகனைக் கொன்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.