நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் கடும் பனிமூட்டம்: 39 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிப்பு

தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 39 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2024, 4:54 am

DIN

புது தில்லி: தேசிய தலைநகர் தில்லியில் கடும் குளிா், அடா்த்தியான மூடுபனி மற்றும் குறைந்த காண்பு திறன் தொடர்ந்து நிலவி வருவதால், தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 39 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் கடும் குளிருக்கு மத்தியில் மிகுந்த அடா்த்தியான மூடுபனி நிலவி வருகிறது. ஏற்கெனவே, வானிலை கண்காணிப்பு மையம் கணித்திருந்தபடி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் குளிா் அலை வீசியது. தலைநகரில் பகல் நேரத்திலும் மிதமான மூடுபனி இருந்தது. இதைத் தொடா்ந்து, ‘ மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், தில்லியில் கடும் குளிா், அடா்த்தியான மூடுபனி மற்றும் குறைந்த காண்பு திறன் தொடர்ந்து நிலவி வருவதால், தில்லிக்கு 39 பயணிகள் ரயில்கள் கால அட்டவணையில் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

வடக்கு ரயில்வே அளித்த தகவலின்படி, தில்லிக்கு வெள்ளிக்கிழமை வரவேண்டிய 39 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், அஜ்மீர்-கத்ரா பூஜா எக்ஸ்பிரஸ், கதிஹார்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் கஜாராவ்-குருக்ஷேத்ரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட மூன்று ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், புவனேஷ்வர்-புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ், பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-நாந்தேட் எக்ஸ்பிரஸ், அசம்கர்-தில்லி ஜங்ஷன் கைஃபியாத் எக்ஸ்பிரஸ், காமாக்யா-தில்லி சந்திப்பு பிரம்மபுத்ரா மெயில் மற்றும் சியோனி-ஃபெரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஆறு நீண்ட தூர ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்கள் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, ஜம்முதாவி-அஜ்மீர் பூஜா எக்ஸ்பிரஸ் மற்றும் காமக்யா-தில்லி ஜங்ஷன் பிரம்மபுத்ரா மெயில் ஆகியவையும் சுமார் ஐந்து மணிநேரம் தாமதமாகின்றன, வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பெங்களூர்-புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ், லக்னௌ-புது தில்லி தேஜாஸ், பிரயாக்ராஜ்-புது உள்ளிட்ட 10 பேர் தில்லி எக்ஸ்பிரஸ், சென்னை-புது தில்லி எக்ஸ்பிரஸ் மற்றும் மாணிக்பூர்-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.

இவை தவிர, ராஜேந்திரநகர்-புது தி ல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், திப்ருகார்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கான்பூர்-புது தில்லி ஷ்ரம்சக்தி, சென்னை-புதுதில்லி எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்-புது தில்லி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 1 முதல் 1.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

இதற்கிடையில், தில்லியில் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாலம் வானிலை கண்காணிப்பு நிலையத்தில், மிகவும் அடர்த்தியான மூடுபனி நிலைமைகள் காரணமாக காண்பு திறன் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது, அதே சமயம் சஃப்தர்ஜங் விமான நிலையம் வெள்ளிக்கிழமை காலை அடர்த்தியான மூடுபனி நிலையில் 200 மீட்டராக  பதிவாகியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தரவுகளின்படி, தில்லியைத் தவிர, குவாலியர் மற்றும் மால்டா, கங்கை மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாபின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தானின் கங்காநகர் உள்ளிட்ட உத்தரப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் காண்பு திறன் 500 மீட்டருக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.