டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு: மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா அறிவிப்பு!

வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவதாக மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

News image

சோரம்தங்கா (கோப்புப்படம்)

Updated On :15 ஜனவரி 2024, 7:21 pm IST

வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறப் போவதாக மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தங்கா, கட்சியின் மூத்த துணைத் தலைவர் டான்லூயாவுடன் இது பற்றி விவாதித்ததாகவும், அவர்கள் இல்லாமல் கட்சி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இன்று (ஜன.15) நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய சோரம்தங்கா, "எனக்கும், கட்சியின் துணைத் தலைவர் டான்லூயாவுக்கும் 80 வயது ஆகிவிட்டது. எனவே இனி நாங்கள் இல்லாமல் கட்சி செயல்பாடுகள் தொடர வேண்டும்.

இதுபற்றி நாங்கள் இருவரும் ஆலோசித்து முடிவெடுத்து உள்ளோம். எங்களது ஓய்வு குறித்து கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளோம். புதிய ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள்" என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்என்எஃப் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, சோரம்தங்கா டிசம்பர் 5ஆம் தேதி தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால், அவரது ராஜிநாமாவை கட்சித் தலைமை நிராகரித்தது.

மிசோ தேசிய முன்னணியை நிறுவி 1966-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை இயக்கத்தை முன்னெடுத்த லால்தெங்காவின் மரணத்திற்குப் பிறகு, 1990 முதல் கட்சியின் தலைவராக சோரம்தங்கா பதவி வகித்து வருகிறார்.

1987, 1989, 1993, 1998, 2003 மற்றும் 2018 ஆகிய 6 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை முதல்வராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.