வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறப் போவதாக மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தங்கா, கட்சியின் மூத்த துணைத் தலைவர் டான்லூயாவுடன் இது பற்றி விவாதித்ததாகவும், அவர்கள் இல்லாமல் கட்சி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இன்று (ஜன.15) நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய சோரம்தங்கா, "எனக்கும், கட்சியின் துணைத் தலைவர் டான்லூயாவுக்கும் 80 வயது ஆகிவிட்டது. எனவே இனி நாங்கள் இல்லாமல் கட்சி செயல்பாடுகள் தொடர வேண்டும்.
இதுபற்றி நாங்கள் இருவரும் ஆலோசித்து முடிவெடுத்து உள்ளோம். எங்களது ஓய்வு குறித்து கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளோம். புதிய ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள்" என்று கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்என்எஃப் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, சோரம்தங்கா டிசம்பர் 5ஆம் தேதி தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால், அவரது ராஜிநாமாவை கட்சித் தலைமை நிராகரித்தது.
மிசோ தேசிய முன்னணியை நிறுவி 1966-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை இயக்கத்தை முன்னெடுத்த லால்தெங்காவின் மரணத்திற்குப் பிறகு, 1990 முதல் கட்சியின் தலைவராக சோரம்தங்கா பதவி வகித்து வருகிறார்.
இதையும் படிக்க | மகனைக் கொன்ற வழக்கு: சுசனாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
1987, 1989, 1993, 1998, 2003 மற்றும் 2018 ஆகிய 6 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை முதல்வராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



