ஜெகந்நாத கலாச்சாரம் நமது கலாச்சாரத்தின் அடித்தளம்: ஒடிசா முதல்வர் பெருமிதம்! 

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயில் விழாவை திருவிழாவாக கொண்டாடுமாறு ஒடிசா மக்களுக்கு நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
படம்: எக்ஸ் | நவீன் பட்நாயக்
படம்: எக்ஸ் | நவீன் பட்நாயக்

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் 2024, ஜனவரி 1-ஆம் தேதி முதல் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று அக்கோயில் நிா்வாகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஜன.17 அன்று புரியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோயில் பாரம்பரிய வழித்தடத் திட்டத்தின் தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் சங்குகளை அடிக்கவும், பக்தி பாடல்களை ஓதவும், கீர்த்தனைகளை செய்யவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பட்நாயக், ஒடிஸா மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோவில், “இந்த விழாவில் நாங்கள் தீபம் (விளக்குகள்) ஏற்றி, சங்கு ஊதுவதன் மூலம், சங்குகளை அடிப்பதன் மூலம், பிரார்த்தனை செய்தல், கோயில்கள், வீடுகளில் பக்தி கீர்த்தனைகளை பாடுவதன் மூலம் நாம் பங்கேற்கலாம். 

உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்கும் ஜெகன்நாதரின் நாமத்தில் நாம் அனைவரும் நமது நல்ல பணியைத் தொடங்குகிறோம். அவர் நமது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உணர்வு ஆகியவற்றின் அடிப்படை ஆதாரம். ஜெகந்நாத கலாச்சாரம் நமது கலாச்சாரத்தின் அடித்தளம். 

திங்கள்கிழமை மகர சங்கராந்தியன்று மூன்று நாள் யாகம் தொடங்கி, ஸ்ரீமந்திர் பரிக்ரம பிரகல்பா என்றும் அழைக்கப்படும் ரூ. 800 கோடி திட்ட தொடக்கத்திற்கான கவுண்டவுன் மூலம், பட்நாயக் மக்கள் ஜெகந்நாதரின் பக்திக்கு தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

மேலும், ஒடிஸா மாநில அரசு ஏற்கனவே ஜன. 17ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com