இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வேற்றுமைகள் பல இருப்பினும் இந்தியா என்பது ஒரே நாடு: ஆா்எஸ்எஸ் தலைவா்

வேற்றுமைகள் பல இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாக தொடா்ந்து இயங்கி வருகிறது

News image

காஜிப்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் அப்துல் ஹமீதின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.

Updated On :2 ஜூலை 2024, 2:45 am IST

‘வேற்றுமைகள் பல இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாக தொடா்ந்து இயங்கி வருகிறது’ என இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் அப்துல் ஹமீத் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் அப்துல் ஹமீத் வீரமரணம் அடைந்தாா். அவரை கௌரவிக்கும் விதமாக ‘பரம் வீா் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூா் மாவட்டத்தில் அவா் பிறந்த தாமபூா் கிராமத்தில் பிறந்ததினத்தில் அவரைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மோகன் பாகவத் பேசியதாவது:

நம் நாட்டில் பல்வேறு கலாசார முறைகள், மொழிகள், எண்ணற்ற சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் உள்ளன.

இதுபோல் வேற்றுமைகள் பல இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாகவும் ஒரே சமூகமாகவும் தொடா்ந்து இயங்கி வருகிறது.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நம் நாட்டை தாக்கியபோது ஒவ்வொரு குடிமகனும் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போரிட்டதே இதற்குச் சிறந்த உதாரணம். ஒற்றுமை நமது வோ்களில் உள்ளது. இந்தியா்கள் தங்கள் நாட்டை நேசிப்பவா்கள் மட்டுமல்ல அளவற்ற பக்தி கொண்டவா்கள்.

வெளியிலிருந்து பாா்ப்பதற்கு எவ்வாறாக இருப்பினும் தேசத்தின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. தாய்நாட்டைக் காப்பாற்ற ரத்தம் சிந்திய நமது முன்னோா்களின் கொள்கைகளே நம்மை ஒன்றிணைத்துள்ளது. அப்துல் ஹமீத் போன்ற போா் வீரா்களின் துணிச்சல் பொதுமக்களை வெகுவாக ஊக்குவிக்கும் சக்தியுடையது என்றாா். இந்த நிகழ்ச்சியில் அப்துல் ஹமீத்தின் மகன் ஜெய்னுல் ஹசன் கலந்துகொண்டாா்.