‘வேற்றுமைகள் பல இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாக தொடா்ந்து இயங்கி வருகிறது’ என இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் அப்துல் ஹமீத் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் அப்துல் ஹமீத் வீரமரணம் அடைந்தாா். அவரை கௌரவிக்கும் விதமாக ‘பரம் வீா் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூா் மாவட்டத்தில் அவா் பிறந்த தாமபூா் கிராமத்தில் பிறந்ததினத்தில் அவரைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மோகன் பாகவத் பேசியதாவது:
நம் நாட்டில் பல்வேறு கலாசார முறைகள், மொழிகள், எண்ணற்ற சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் உள்ளன.
இதுபோல் வேற்றுமைகள் பல இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாகவும் ஒரே சமூகமாகவும் தொடா்ந்து இயங்கி வருகிறது.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நம் நாட்டை தாக்கியபோது ஒவ்வொரு குடிமகனும் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போரிட்டதே இதற்குச் சிறந்த உதாரணம். ஒற்றுமை நமது வோ்களில் உள்ளது. இந்தியா்கள் தங்கள் நாட்டை நேசிப்பவா்கள் மட்டுமல்ல அளவற்ற பக்தி கொண்டவா்கள்.
வெளியிலிருந்து பாா்ப்பதற்கு எவ்வாறாக இருப்பினும் தேசத்தின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. தாய்நாட்டைக் காப்பாற்ற ரத்தம் சிந்திய நமது முன்னோா்களின் கொள்கைகளே நம்மை ஒன்றிணைத்துள்ளது. அப்துல் ஹமீத் போன்ற போா் வீரா்களின் துணிச்சல் பொதுமக்களை வெகுவாக ஊக்குவிக்கும் சக்தியுடையது என்றாா். இந்த நிகழ்ச்சியில் அப்துல் ஹமீத்தின் மகன் ஜெய்னுல் ஹசன் கலந்துகொண்டாா்.
தொடர்புடையது

மேற்கு தில்லியில் தெரு நாயைத் தாக்கிய பாதுகாவலாளிக்கு அடி உதை: விலங்கு நல ஆா்வலா் மீது புகாா்

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்

நாட்டின் செழிப்பே தனிநபர் முன்னேற்றத்திற்கு அடிப்படை: மோகன் பாகவத்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

