அயோத்தியில் போட்டியிட மோடி முயற்சி; எச்சரிக்கையால் தவிர்ப்பு: ராகுல்

மணிப்பூருக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லாதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி.
ராகுல், மோடி
ராகுல், மோடி
Published on
Updated on
1 min read

அயோத்தி உள்ள தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இரு முறை போட்டியிட முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ராகுல், மோடி
பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர்: ராகுல் காந்தி

அப்போது அயோத்தி குறித்து ராகுல் காந்தி பேசியதாவது:

“அயோத்தி கோயில் பாஜகவுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளது. அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட இடம் வலுகட்டாயமாக கையகப்படுத்தப்பட்டது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் மக்கள் இல்லை. அம்பானியும், அதானியும்தான் இருந்தனர். பொதுமக்களுக்கு அழைப்பும் இல்லை, அவர்கள் வரவும் இல்லை.

அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட பிரதமர் இரு முறை முயற்சித்தார். ஆனால், கணிப்பாளர்கள் வேண்டாம் என மோடியிடம் தெரிவித்துவிட்டனர்.” எனத் தெரிவித்தார்.

ராகுல், மோடி
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. அவையில் பிரதமர் மோடி பதில்

மேலும், பாஜகவின் கொள்கைகளாலும், அரசியலாலும் மணிப்பூரை எரித்துவிட்டனர். உள்நாட்டு போராக மாற்றியுள்ளனர். இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com