மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஹிமாசலில் கனமழை: 115 சாலைகள் மூடல்!

கனமழையால் ஹிமாசலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

News image

ஹிமாசல் சாலையில் சரிந்துகிடக்கும் கற்கள்

Updated On :4 ஜூலை 2024, 8:00 am

PTI

ஹிமாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு 115 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையடுத்து, சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் கற்கள் சரிந்துள்ளது.

இதன் காரணமாக மண்டியில் 107, சம்பாவில் 4, சோலனில் 3 மற்றும் காங்க்ரா மாவட்டத்தில் ஒன்று உள்பட 115 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளன. மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின்படி மாநிலத்தில் 212 மின்மாற்றிகள் தடைப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சண்டீகர்-மனாலி நான்கு வழிச் சாலையின் மண்டி முதல் பண்டோ வரையிலான பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே புதன்கிழமை முதல் ஒருவழிப் போக்குவரத்தை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டதாகவும், ஆனால் அது மூழ்கி இரண்டு அடிக்கு மேல் தாழ்வாகிவிட்டதாகவும், கட்டுமானத்தின் தரம் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜூலை 5 வரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று மற்றும் மழையால் பயிர்கள், குடிசைகள் சேதம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. போக்குவரத்து இடையூறு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாநிலத் தலைநகர் சிம்லாவில் புதன்கிழமை மாலையிலிருந்து 84 மிமீ மழைப் பதிவாகியுள்ள நிலையில், பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சுந்தர்நகர் 111 மி.மீட்டரும், அதைத் தொடர்ந்து பாலம்பூர் 109.4 மிமீ, சிம்லா 84 மிமீ, கோஹர் 80 மிமீ, சோலன் 79.8 மிமீ, மஷோப்ரா 78.5 மிமீ, ஜோகிந்தர்நகர் 75 மிமீ, பைஜ்நாத் 70 மிமீ, மண்டி 55.2 மிமீ, நர்கண்டா 44 மிமீ, 24 மிமீ மழை பெய்துள்ளது. .

சிம்லா மாவட்டத்தில் உள்ள நர்கண்டா பகுதியில் இரவு முழுவதும் அதிக குளிர் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.