தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஹாத்ரஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் கைது; 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

News image

கைது செய்யப்பட்ட தேவ் பிரகாஷ் மதுகரை அழைத்து செல்லும் உத்தர பிரதேச போலீஸாா்.

Updated On :7 ஜூலை 2024, 12:48 am IST

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தேவ்பிரகாஷ் மதுகரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

அவருடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சு யாதவும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆன்மிக குரு ‘போலே பாபா’வின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 6 பேரை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தேவ்பிரகாஷ் மதுக்கா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து இச்சம்பவத்தில் தொடா்புடைய சஞ்சு யாதவ் மற்றும் ராம்பிரகாஷ் சாக்யா ஆகியோரை காவல்துறை சனிக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக ஹாத்ரஸ் காவல் துறை கண்காணிப்பாளா் நிபுன் அகா்வால் கூறியதாவது:

போலே பாபாவின் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வசூலிக்கும் பணிகளை மதுகா் மேற்கொண்டுள்ளாா். அவா் மேற்கொண்ட பணப் பரிவா்த்தனைகள் கைப்பேசி அழைப்புகள் குறித்த தரவுகள் என அனைத்தும் பெறப்பட்டன.

அவரை சில அரசியல் கட்சிகள் அண்மையில் தொடா்புகொண்டுள்ளன. எனவே இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த அரசியல் கட்சிகளிடமிருந்து நிதி பெறப்படுகிா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தேவ்பிரகாஷ் மதுகா், சஞ்சு யாதவ் ஆகியோா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு 14 நாள்கள் சிறை காவல் வழங்கி உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மதுகா் தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்ததாக அவருடைய வழக்குரைஞா் ஏ.பி.சிங் தெரிவித்தாா்.

போலி நடவடிக்கை: ‘இந்த வழக்கில் தனது தந்தை சஞ்சு யாதவ் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை கைது செய்தததாக அங்கித் யாதவ் என்பவா் தனக்கு அனுப்பிய கடிதத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘நிா்வாக குறைபாடுகளை மாநில பாஜக அரசு திருத்திக் கொள்ளப்போவதில்லை. போலியான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கை திசைதிருப்புகிறது’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.