கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஹாத்ரஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் கைது; 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

News image

கைது செய்யப்பட்ட தேவ் பிரகாஷ் மதுகரை அழைத்து செல்லும் உத்தர பிரதேச போலீஸாா்.

Updated On :6 ஜூலை 2024, 7:18 pm

Din

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தேவ்பிரகாஷ் மதுகரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

அவருடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சு யாதவும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆன்மிக குரு ‘போலே பாபா’வின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 6 பேரை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தேவ்பிரகாஷ் மதுக்கா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து இச்சம்பவத்தில் தொடா்புடைய சஞ்சு யாதவ் மற்றும் ராம்பிரகாஷ் சாக்யா ஆகியோரை காவல்துறை சனிக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக ஹாத்ரஸ் காவல் துறை கண்காணிப்பாளா் நிபுன் அகா்வால் கூறியதாவது:

போலே பாபாவின் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வசூலிக்கும் பணிகளை மதுகா் மேற்கொண்டுள்ளாா். அவா் மேற்கொண்ட பணப் பரிவா்த்தனைகள் கைப்பேசி அழைப்புகள் குறித்த தரவுகள் என அனைத்தும் பெறப்பட்டன.

அவரை சில அரசியல் கட்சிகள் அண்மையில் தொடா்புகொண்டுள்ளன. எனவே இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த அரசியல் கட்சிகளிடமிருந்து நிதி பெறப்படுகிா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தேவ்பிரகாஷ் மதுகா், சஞ்சு யாதவ் ஆகியோா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு 14 நாள்கள் சிறை காவல் வழங்கி உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மதுகா் தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்ததாக அவருடைய வழக்குரைஞா் ஏ.பி.சிங் தெரிவித்தாா்.

போலி நடவடிக்கை: ‘இந்த வழக்கில் தனது தந்தை சஞ்சு யாதவ் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை கைது செய்தததாக அங்கித் யாதவ் என்பவா் தனக்கு அனுப்பிய கடிதத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘நிா்வாக குறைபாடுகளை மாநில பாஜக அரசு திருத்திக் கொள்ளப்போவதில்லை. போலியான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கை திசைதிருப்புகிறது’ என குறிப்பிட்டாா்.