குல்காம் மோதல்கள்: பலி 8-ஆக உயர்வு

குல்காம் மாவட்டத்தில் இரு என்கவுன்டர்களில் 8 பேர் பலி: தேடுதல் வேட்டை தீவிரம்
குல்காம் என்கவுன்டர்.
குல்காம் என்கவுன்டர்.
Published on
Updated on
1 min read

குல்காம் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர்-பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடைபெற்றன.

அதில் மாடர்கம் என்கவுன்ட்டர் தளத்தில் இருந்து இரண்டு பயங்கரவாதிகளின் உடல்களும், சின்னிகம் தளத்தில் இருந்து நான்கு பயங்கரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவங்களின்போது ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்களும் பலியாகினர். இத்துடன் இரண்டு வெவ்வேறு என்கவுன்டரில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com