கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அசாம் வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராகுல்

அசாம் வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

News image

அசாமில் ராகுல்

-

Updated On :8 ஜூலை 2024, 9:55 am

பிடிஐ

கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்ட அசாமில், அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

புது தில்லியிலிருந்து வன்முறை பாதித்த மணிப்பூர் செல்லும் வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்துக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

அசாம் வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில், அசாம் வெள்ளம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசிடம் கோரி, நிவாரண மற்றும் இழப்பீடு பெற்றுத்தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற்று உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அசாம் அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

கச்சார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களது குறைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். பிறகு அசாமிலிருந்து புறப்பட்டு மணிப்பூர் சென்றார் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.