ஹாத்ரஸில் 121 போ் உயிரிழந்த துயரம்: 300 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றிருந்தது விசாரணையில் அம்பலம்..
ஹாத்ரஸில் 121 போ் உயிரிழந்த துயரம்: 300 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read
படம் | ஏஎன்ஐ

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை உத்தரபிரதேச மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

300 பக்க விசாரணை அறிக்கையில் அதன்படி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படம் | ஏஎன்ஐ

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்பட, ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என மொத்தம் 119 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற ’போலே பாபா’ சாமியாரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தேவ் பிரகாஷ் மதுக்கர் என்பவர் இம்மாதம் 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை தொடருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com