தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

2 வாரங்களுக்குள் பதிலளிக்க பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

தடை செய்யப்பட்ட தனது 14 பொருள்களின் விற்பனையை நிறுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி விளக்கம்!

News image

தவறான விளம்பர சித்தரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான யோகா குரு ராம்தேவ் - கோப்புப் படம்/ பிடிஐ

Updated On :9 ஜூலை 2024, 10:26 am

ஏப்ரல் மாதம் உத்தரகாண்ட் மாநில மருந்துகள் உரிமம் வழங்கும் ஆணையத்தால் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்ட 14 பொருள்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுமம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் பதஞ்சலி நிறுமம் தனது 5,606 கிளைகளிலிருந்தும் அந்த பொருள்களை திரும்ப பெற அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.

அதே போல அந்த பொருள்களுக்கான விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்தவும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டதாக பதஞ்சலி தெரிவித்தது.

இந்த வழக்கில் 14 பொருள்களின் விளம்பரத்தை திரும்ப பெற பதஞ்சலி முன்வைத்த கோரிக்கை சமூக ஊடங்களால் ஏற்கப்பட்டதா விளம்பரங்கள் திரும்ப பெறப்பட்டனவா என்பது குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அமர்வு கேட்டுக்கொண்டு மேலதிக விசாரணையை ஜூலை 30-க்கு ஒத்திவைத்தது.

ஆயுர்வேத பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி மீது இந்திய மருத்துவ கூட்டமைப்பு தொடர்ந்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி முன்வைக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநில மருந்துகள் உரிமம் வழங்கும் ஆணையம் பதஞ்சலி மற்றும் திவ்யா பார்மஸி நிறுவனங்களின் 14 பொருள்களுக்கு உடனடியான தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.