ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

இதனால்தான் உங்களை வழிகாட்டி என்கிறோம்! யாரைப் புகழ்கிறார் ஆனந்த் மஹிந்திரா?

இதனால்தான் உங்களை வழிகாட்டி என்கிறோம் ஏன்று ராகுல் டிராவிட்டை புகழ்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

News image

ஆனந்த் மஹிந்திரா

Updated On :11 ஜூலை 2024, 11:44 am IST

டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் பரிசுத் தொகையை வேண்டாம் என்று மறுத்துவிட்ட நிலையில், இதனால்தான் உங்களை வழிகாட்டி என்கிறோம் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கும், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் ஆனந்த் மஹிந்திரா தனது பாராட்டுகளை தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதாவது, ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது.

பிசிசிஐ ஒட்டுமொத்தமாக ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது. மகாராஷ்டிர அரசும் ரூ.11 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடியாக பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், டிராவிட், மற்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2.5 கோடியே போதுமானது என்று கூறி, அதிகப்படியான பரிசுத் தொகையை நிராகரித்துவிட்டார்.

இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், இதுதான் ஒரு மனிதனின் அடையாளம்... இதனால்தான் உங்களை வாழ்வின் வழிகாட்டி என்கிறார்கள் என்று டிராவிட்டைப் புகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமா, ராகுல் டிராவிட்டின் இந்த முடிவு குறித்து செய்திகள் வெளியானதும், சமூக ஊடகம் முழுக்க அவருக்கு பாராட்டு மழைப் பொழிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.