சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஜூன் 25 அரசமைப்பு படுகொலை நாள்: மத்திய அரசு அறிவிப்புக்கு காங். எதிர்ப்பு!

ஜூன் 25 - அரசியலமைப்பு படுகொலை நாள்: மத்திய அரசு அறிவிப்புக்கு காங். கடும் எதிர்ப்பு

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :12 ஜூலை 2024, 8:49 pm IST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

அரசின் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், கண்டனத்தை பதிவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பாஜக அரசு அரசமைப்பு படுகொலை நாளை அனுசரித்து வருகிறது.

பாஜக - ஆர்எஸ்எஸ் இவ்விரண்டும் அரசமைப்பை நீக்கிவிட்டு மனுஸ்மிருதி முறையை அமல்படுத்த விரும்புகின்றன. இதன்மூலம், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.

புனிதத்துவமான அரசமைப்பு என்ற சொல்லுடன் படுகொலை என்ற வார்த்தையை இணைத்துள்ளதன் மூலம், அம்பேத்கரை அவமதிக்கின்றன பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.