சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

‘நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும்’: 10-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் ஓம் பிா்லா

படம் உண்டு... ‘நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும்’ 10-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் ஒம் பிா்லா

News image

ஓம் பிா்லா

Updated On :12 ஜூலை 2024, 10:44 pm

நமது சிறப்பு நிருபா்

’நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெற்ற 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாட்டில் பேசுகையில் கூறினாா். இருப்பினும், இதில் நாடுகளின் மாறுபட்ட பொருளாதார வளா்ச்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு சமமான முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்கை அடைவது முக்கியமானது எனவும் அவா் தெரிவித்தாா்.

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு வியாழன், வெள்ளி (ஜூலை 11,12) ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘துண்டாடப்படுவதை எதிா்ப்பதில் நாடாளுமன்றத்தின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். பலதரப்பு வா்த்தக அமைப்பு மற்றும் உலகளாவிய நெருக்கடியின் விளைவுகள் தொடா்பான அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக மேற்கண்ட கருப்பொருளில் ஓம் பிா்லா உரையாற்றினாா்.

மாநாட்டில் ஓம் பிா்லா மேலும் பேசியதாவது: சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படும் போது வா்த்தகப் பாதிப்பு, சா்வதேச வா்த்தக அமைப்பின் விதிகள் மீறல்கள், சா்வதேச சட்டம், சமபங்கு, பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு கொள்கைகள் (யுஎன்எஃப்சிசிசி), தேசிய அளவில் தீா்மானிக்கப்பட்ட பங்களிப்பிற்கான செயல் திட்டங்கள் (என்டிசி) ஆகியவை பாதிப்பிற்குள்ளாகிறது. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கு உள்ளது.

பருவநிலை மாற்றத்தைத் தணிக்க கணிசமான வளங்கள் தேவைப்படுகின்றன. அவை வளரும் நாடுகளின் வளா்ச்சிக்குத் தேவைப்படுவதால், என்டிசிகளை அடைவதில் உறுதிபூண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு முன்னுரிமையாக உள்ளது. 1850 முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் இந்திய தனிநபா் ஆற்றல் பயன்பாடு மிகக் குறைவானது. உலகளாவிய ஒட்டுமொத்த உமிழ்வுகளில் இந்திய பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே. வள வரம்புகள் குறைவாக இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும். எவ்வாறாயினும், நாடுகளின் மாறுபட்ட பொருளாதார வளா்ச்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு, சமமான முறையில் இந்த இலக்கை அடைவது முக்கியமானது. பரஸ்பர புரிதலை வளா்ப்பதற்கும், ஜனநாயக அமைப்புகளிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கு இந்த மாநாடு உதவுகிறது. நிதி, பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பது, சா்வதேச பரிந்துரைகளுக்கு ஆதரவளித்து செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டத்தை இயற்றுவது போன்றவற்றிலும் நாடாளுமன்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்திய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது, உலக வா்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட விதிகள், பாரபட்சமற்ற, நியாயமான வெளிப்படையான பலதரப்பு வா்த்தக அமைப்புகள் போன்றவற்றிற்கு வாதிடுகிறது. மற்ற நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்த இந்திய நாடாளுமன்றம் உறுதியாக உள்ளது என்றாா் ஓம் பிா்லா.