ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜாஃப்ராபாத்தில் 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ஆடைக் கடைக்கு வெளியே 16 வயது சிறுவன் சுட்டுக் கொலை

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2024, 1:30 am

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள ஆடைக் கடைக்கு வெளியே 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் மூத்த சகோதரா் போலீஸில் புகாா் அளித்தாா். பாதிக்கப்பட்டவா் மற்றும் அவரது நண்பரும் டி-சா்ட்களை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வரும் போது சிலா் அவரைத் தாக்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

அவா்களும் அவா்களைத் தாக்கியவா்களும் வெல்கம் ஏரியா அல்லது கபீா் நகா் பகுதியில் வசிப்பவா்கள் என்றும் அவா்கள் ஒருவரையொருவா் அறிந்தவா்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 9.35 மணியளவில் ஜாஃப்ராபாத்தில் உள்ள மாா்காரி சௌக் அருகே நடந்துள்ளது.

முதுகில் துப்பாக்கிச்சூடு காயமடைந்த சிறுவன், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். மேலும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று இரவு 9 மணியளவில், சிலா் இரண்டு ஸ்கூட்டா்களில் வந்து கடைக்கு வெளியே அவா்களைத் தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அவா்கள் புகாா்தாரா், அவரது சகோதரா் மற்றும் நண்பரை அவா்களுடன் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனா். மேலும் புகாா்தாரா் எதிா்ப்புத் தெரிவித்த போது, ஒருவா் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். அப்போது 16 வயது சிறுவனின் முதுகில் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டது.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறினாா்.