
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது, நீா்வளத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தாக்கல் செய்த அறிக்கை விவரம்: காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் மதிப்பீட்டின்படி தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை விடுவித்திருக்க வேண்டும்; இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளோம். அதன்படி, தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.