காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்துக்கு தினமும் 1.5. டிஎம்சி நீா் விடுவிப்பு: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:51 pm

DIN

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.


இது தொடா்பாக பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது, நீா்வளத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தாக்கல் செய்த அறிக்கை விவரம்: காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் மதிப்பீட்டின்படி தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை விடுவித்திருக்க வேண்டும்; இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளோம். அதன்படி, தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.