பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இளைஞரை 40 நாள்களில் 7 முறை கடித்த பாம்பு...விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

உ.பி. இளைஞரை 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததாக கூறிய விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :18 ஜூலை 2024, 4:17 pm IST

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்பவர் 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததாகக் கூறிய சம்பவத்தில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விகாஸ் துபே கூறும்போது, 40 நாள்களில் ஏழு முறை பாம்பு கடியிலிருந்து தப்பியதாகயும், ஊர்வன உயிரிகள் கனவில் தோன்றியதாகவும், அது 9 ஆவது முறையில் தனது உயிரைப் பறிப்பதாகவும் கூறினார்.

மேலும், ஃபதேப்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தில் தனது மாமா வீட்டில் இருந்தபோது ஏழாவது முறையாக பாம்பு கடித்து பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாம்பு கடிக்கும் என்று கூறிய வினோதமான நிகழ்வால் மருத்துவர்களும் குழப்பமடைந்தனர்.

ஒவ்வொரு முறையும் கடிபடுவதற்கு முன், தனக்கு ஒரு கனவு வருகிறது என்றும் அவர் கூறினார். துபேக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜவஹர்லால், அவரது வீட்டைவிட்டு வேறு இடத்தில் தங்கும்படி அறிவுறுத்தினார்.

அவரை முதல்முறை பாம்பு கடித்ததால் பயம் ஏற்பட்டு தன்னை அடிக்கடி பாம்பு கடிப்பதாக எண்ணி அச்சப்பட்டுள்ளார். விகாஸ் துபேயின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக ஃபதேபூர் மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவரான இந்துமதியின் உத்தரவின் பேரில் விசாரணை அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 மருத்துவர் குழுவை தலைமை மருத்துவ அதிகாரி அமைத்தார்.

திங்கள்கிழமை (ஜூலை 15) அன்று, மருத்துவர்கள் ராஜீவ் நயன் கிரி, பிரதீப் ராமன், நைப் தாசில்தார் சிட்டி விஜய் பிரகாஷ் திவாரி, இஷ்டியாக் அகமது, ராஜேந்திர வர்மா, என்கே சக்சேனா ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விகாஸ் துபேவுக்கு பாம்பு பயம் என்று அறியப்படும் ஓபிடியோபோபியா (ophidiophobia) இருப்பது தெரியவந்துள்ளது.

ஃபதேபூரின் தலைமை சுகாதார அதிகாரியால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதி, சுகாதாரத் துறை வெளியிட்ட தனது அறிக்கையில், ஒரு பாம்பு மட்டுமே அவரை கடித்துள்ளது தெரியவந்துள்ளது.

விகாஸ் துபே ஓபிடியோபோபியாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விகாஸ் துபே மனநல ரீதியிலாக பாதிக்கப்பட்டிருப்பதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.