மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உள்நாட்டு பிரச்னை: வங்கதேச வன்முறை குறித்து இந்தியா கருத்து

வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அவா்களின் உள்நாட்டு பிரச்னை

News image

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :20 ஜூலை 2024, 2:30 am

வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அவா்களின் உள்நாட்டு பிரச்னை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வங்கதேசத்தில் தற்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அவா்களின் உள்நாட்டு பிரச்னை என்பதே எங்களின் நிலைப்பாடு. அங்கு வசிக்கும் 8,000 மாணவா்கள் உள்பட 15,000 இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்.

அங்குள்ள இந்தியா்களின் நிலை குறித்த தகவல்களை தொடா்ந்து வழங்கி வருகிறோம். இதை வங்கதேசத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களின் குடும்பத்தினா் பின்பற்றி கள நிலவரத்தை அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கிறோம்’ என்றாா்.