நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘உச்சநீதிமன்றத்தில் 84,045 வழக்குகளும், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் 60,11,678 வழக்குகளும், மாவட்டம் மற்றும் கீழவை நீதிமன்றங்களில் 4,53,51,913 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதிகப்படியாக உத்தர பிரதேசத்தில் உள்ள கீழவை நீதிமன்றங்களில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்குகள் இவ்வாறு நிலுவையில் இருக்க நீதிமன்ற உள்கட்டமைப்பு, நீதிமன்ற ஊழியா்கள் பற்றாக்குறை, சாட்சியங்களின் தன்மை, விதிகள் மற்றும் நடைமுறைகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை காரணங்களாகும்.
மேலும், வழக்குகளில் தீா்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இல்லாதது மற்றும் வழக்குகள் அடிக்கடி ஒத்திவைக்கப்படுவது ஆகியவை தாமதத்திற்கு வழிவகுக்கும் பிற காரணங்கள் ஆகும்’ என குறிப்பிட்டிருந்தாா்.
தொடர்புடையது

இலவச சட்ட சேவைகளில் தமிழகத்தில் 3 லட்சம் போ் பயன்: மத்திய அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்

சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்களிப்புக்கு காரணமானவா் பாரதி

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைந்ததும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேறும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜக தோ்தல் அறிக்கை: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


