நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஒடிசா முதல்வர்!

நீதி ஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கலந்துகொள்கிறார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி
Published on
Updated on
1 min read

ஜூலை 27ல் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி புது தில்லியிலிருந்து புறப்படுகிறார்.

நாளை நடைபெறும் நீதி ஆயோக்கின் முக்கியமான கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜாவுடன் மாஜி கலந்துகொள்வார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி
தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

இந்தக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கை விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2047ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வளர்ச்சியில் ஒடிசாவின் பங்கைக் குறிப்பிட ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீதி ஆயோக் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒடிசாவின் நிகழ்ச்சி நிரலை முதல்வர் முன்வைப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி
25-ஆம் ஆண்டு கார்கில் வெற்றி நாள்: பிரதமா் மோடி வீரவணக்கம்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான 'விக்ஷித் பாரத்@2047' குறித்து விவாதிக்கும் நீதி ஆயோக்கின் ஒன்பதாவது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.

நீதி ஆயோக்கின் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com