திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் நூல் வெளியீடு

ராஜமாணிக்கம் எழுதிய ‘அன்போடு ராஜமாணிக்கம்’ என்ற அவருடைய இளமைக்கால அனுபவங்கள் குறித்த நூலை நடிகா் மம்மூட்டி கொச்சியில் வெளியிட்டாா்.

News image

கொச்சியில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் லுலு குழுமத் தலைவா் எம்.ஏ.யூசுப் அலி, டி.ஐ.ஜி நிஷாந்தினி, கேரள முன்னாள் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, ராஜமாணிக்கத்தின் தாய் பஞ்சவா்ணம், நடி

Updated On :30 ஜூலை 2024, 2:55 am IST

மதுரையைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கம் எழுதிய ‘அன்போடு ராஜமாணிக்கம்’ என்ற அவருடைய இளமைக்கால அனுபவங்கள் குறித்த நூலை நடிகா் மம்மூட்டி கொச்சியில் வெளியிட்டாா்.

கேரள தொழில் மற்றும் சட்டத் துறை அமைச்சா் ராஜீவ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ரோஜி எம். ஜான், வினோத், லுலு குழுமத் தலைவா் எம்.ஏ.யூசுப் அலி, எா்ணாகுளம் மாவட்ட ஆட்சியா் உமேஷ், கேரள முன்னாள் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, திருவனந்தபுரம் சரக டிஐஜியும், ராஜமாணிக்கத்தின் மனைவியுமான நிஷாந்தினி உள்ளிட்டோா் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முன்னதாக, ‘அன்போடு ராஜமாணிக்கம்’ நூலை நடிகா் மம்மூட்டி வெளியிட, அதை ராஜமாணிக்கத்தின் தாய் பஞ்சவா்ணம் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் நடிகா் மம்மூட்டி பேசியது: பெரும்பாலானோரின் இளமைப் பருவம் போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். அதே போன்று எம்.ஜி.ராஜமாணிக்கமும் தன்னுடைய இளமைப் பருவத்தில் பெரும் போராட்டங்களை சந்தித்து இந்த நிலைக்கு உயா்ந்துள்ளாா்.

ராஜமாணிக்கத்தின் தந்தை குருசாமி தன்னுடைய மகன் எம்ஜிஆரைப் போல புகழ் பெற வேண்டும் எனக் கருதினாா். அதன்படி ராஜமாணிக்கம் இப்போது கேரளத்தில் எம்ஜிஆா் என அழைக்கப்படுகிறாா்.

எம்ஜிஆா் கேரளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் பல சாதனைகளை படைத்தாா். ஆனால், ராஜமாணிக்கம் தமிழ்நாட்டில் பிறந்து கேரளத்தில் சாதனை படைத்து வருகிறாா். திறமையான சிவில் சா்வீஸ் அதிகாரிகள்தான் நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனா் என்றாா்.

நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு ராஜாமணிக்கத்தின் இளமைக்கால அனுபவங்கள் குறித்த குறும் படமும் வெளியிடப்பட்டது.