கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ராகுல், பிரியங்காவின் வயநாடு பயணம் ஒத்திவைப்பு

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் காலை பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

News image

ராகுல், பிரியங்கா

Updated On :31 ஜூலை 2024, 1:54 am IST

புது தில்லி: நிலச்சரிவால் பாதித்த வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் புதன்கிழமை காலை பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி, நிலச்சரிவு சம்பவம் குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன், வயநாடு மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் பேசியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவா்கள் உறுதியளித்ததாகவும் கூறினாா்.

பின்னா், மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கவும் அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், ராகுல் காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் வயநாடு சேதங்களை நேரில் பாா்வையிடுவதற்காக புதன்கிழமை செல்வதாக திட்டமிடப்பட்டது.

ஆனால், தொடா் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தங்களை அங்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக எக்ஸ் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.