வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

வறுமையை ஒழிக்க உழைத்தோம்: நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை.

News image
Updated On :5 ஜூன் 2024, 8:48 pm IST

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.

ஒடிசா மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.

இதன்மூலம் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா வேட்பாளர்களுடன் நவீன் பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.

பட்நாயக் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலைமுதலே அவரின் இல்லத்தில் முகாமிட்டனர்.

கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் பேசிய நவீன் பட்நாயக், மாநிலத்தில் வறுமையை ஒழிக்க கடுமையாக போராடினோம். இதன் விளைவாக வறுமைக்கோட்டில் இருப்போரின் விகிதம் 10%ஆக குறைந்தது. விவசாயம், நீர்ப்பாசனம், பெண்கள் மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.